
8 இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.
கைதான மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்