
8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது தேசிய உறவுகள் நலன்புரி சங்கத்தால் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி 8 அறநெறி பாடசாலைகளுக்கு 250 கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், இந்து கலாசார உத்தியோகத்தர் மற்றும் நலன்புரி அமைப்பின் ஊழியர்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



