ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்
-மன்னார் நிருபர்-
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று புதன்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.
தாய் தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் போலீசார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்