
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்