450 அரச நிறுவனங்களை ஆராய கோப் குழு தீர்மானம்

450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்களைப் பெறுவதற்காக, அவற்றில் 450 நிறுவனங்களிடமிருந்து எழுத்துப்பூர்வ அறிக்கைகளைக் கோருவதற்கு கோப் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் அதிக அளவில் உள்ள நிறுவனங்கள் விசாரணைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்றார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் அதிக அளவில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மிக விரைவில் குழுவின் முன் அழைக்கப்படுவார்கள் என்றும், அந்த நிறுவனங்களின் ஊழல்கள் விசாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அந்த விசாரணைகளின் போது தெளிவாக வெளிப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு, கோப் குழு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.