45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம்

45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் அதன் கலை இலக்கிய, ஊடக மற்றும் சமூகமேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் நோக்கோடு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில் கலாமித்ரா விருதுவிழாவை இம்முறை நடத்துகின்றது.

புதிய அலை கலை வட்டத்தின் 45ஆவது ஸ்தாபக தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி இந்நிகழ்வு கொழும்பு-11 இல.291,செட்டியார்தெருவில் அமைந்துள்ள கல்யாணமுருகன் மண்டபத்தில் ஸ்தாபகர் ராதாமேத்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வினில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோச கரும் புரவலர் புத்தகப்பூங்கா மற்றும் ஹாசிம் உமர் நிதியத்தின் நிறுவனருமான ஹாசிம் உமர் பிரதமஅதிதியாகக் கலந்து கொள்கின்றார்.

கௌரவ அதிதிகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் காஞ்சிபுரம் தியாகராஜன், தொழில்அதிபர் ஜி.குணசேகரன்,வீரகேசரி பத்திரிகை பிரதமஆசிரியர் ஸ்ரீகஜன்,தினகரன் பத்திரிகை ஆசிரியர் தெ. செந்தில்வேலவர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.ரி.குருசாமி, சமூகசேவையாளர் அஸிஸ் லஹானா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஆர். வைத்தமாநிதி,தொழில்அதிபர் ஜே.பி.ஜெயராம் ஆகியோரும் –

சிறப்பு அதிதிகளாக சூரியன் எவ்.எம் வானொலி பிரதானி நவநீதன், எக்ஸலண்ட் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்ரீவைகுந்தன், சக்திஎவ்.எம் வானொலி செய்திப்பிரிவு பிரதானி ஆர்.கோகுல்நாத், பிரபல நடனக் கலைஞர் டிஸ்கோராஜா, கருணாநிதிசிதம்பரம், சபேஸன் ஆகியோரும், விசேட அதிதிகளாக சமூகசேவகி தனலக்ஷ்மி மாதவன், நடனஆசிரியைகளான ரேனூகாதேவி, செல்வராணி, சர்மிலாசுப்பிரமணியம், பிரியதர்ஷனி விக்கினேஸ்வரன், நதீக்கா சந்திரன், துவாரகரவீந்திரகுமார்,சங்கீத ஆசிரியை பகவதி ரமேஸன் மற்றும் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வுக்கான ஒத்துழைப்புகளை பிரதம நிர்வாகத்தின் தலைவர் சண்மு, செயலாளர் பி.ரி.செல்வம், பொருளாளர் ஒவியன் உப தலைவர் எஸ். சந்திரன் ஆகியோர் வழங்குகின்றனர்.