390,000 நீர் விநியோக இணைப்புகள் இன்னும் சீர்செய்யப்படவில்லை
அண்மைய நாள்களில் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக தடைபட்ட மொத்தம் 387,964 வீட்டு நீர் விநியோக இணைப்புகள் இதுவரை சீர்செய்யப்படவில்லை.
தீவு முழுவதும் உள்ள 2,947,833 நீர் விநியோக இணைப்புகளில், கணிசமான பகுதி பேரிடர் சூழ்நிலை காரணமாக சேதமடைந்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் சுமார் 66% நீர் விநியோக இணைப்புகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை
என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது .
மேலும், கேகாலை மாவட்டத்தில் 75.09%, குருநாகல் மாவட்டத்தில் 41.34% மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 52.82% இணைப்புகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
