33 ரயில் சேவைகள் இன்று ரத்து

ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று வியாழக்கிழமை 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று காலை இடம்பெறவிருந்த 10 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான பாதையில் 13 புகையிரத சேவைகளும், கரையோரப் பாதையில் 8 புகையிரத சேவைகளும், புத்தளம் பாதையில் 6 புகையிரதங்களும், களனி பள்ளத்தாக்கு பாதையில் மேலும் 6 புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படவுள்ளன.