320000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்-

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் பி (B) பிரிவின் காட்டு பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 320000 மில்லி லீற்றர் கோடாவும், 4 பெரல்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டோர் 53,42 வயதுடைய ஹொப்டன் பழைய ஸ்டோர் B பிரிவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேக நபர்களையும் 4 பெரல்களும், கோடாவும் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊவா மாகாணத்தில் உள்ள பல தோட்ட பகுதிகளில் பாரிய அளவு கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதனால் சமூக கலாச்சார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கசிப்பு உற்பத்தியை இல்லாதொழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்