
3 வாரங்களுக்குள் அனைத்துக் கழிவுகளும் அகற்றப்பட வேண்டும்
அனர்த்த நிலைமையின் விளைவாகக் குவிந்துள்ள கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும், அனைத்து சுத்திகரிப்பு செயல்முறைகளும் மூன்று வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற மேல் மாகாண கழிவு முகாமைத்துவ குழுவின் கூட்டத்தின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்த கழிவுகளை அகற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, கெரவலப்பிட்டியில் உள்ள காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணித் துண்டு இந்தக் காரியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது குவிந்துள்ள கழிவுகளைச் சிரமமின்றி அகற்ற முடியும் என அக்குழு தீர்மானித்தது.
இந்த காணியில் சேமிக்கப்படும் கழிவுகளையும் முறையாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
