3 நாட்களாக காணாமல் போயுள்ள மனைவியை தேடும் இளம் கணவன்!

-யாழ் நிருபர்-

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

டினுசன் நிஸ்ரலா (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணை கண்டு பிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

கடந்த 29ம் திகதி இரவு 11மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்த வேளை அருகில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி காணாமல் போயுள்ளார்.

அதனைத்தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயாரின் வீட்டில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்த நிலையில் குறித்த பெண்ணை கண்டுபிடிக்க அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பம் கேட்டு நிற்கின்றனர் .