வெளிநாட்டிலுள்ள மனைவியை மீட்டுத் தாருங்கள்! மின்கம்பத்தில் ஏறி போராடிய நபரால் பரபரப்பு
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேலியகொடையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் குறித்த நபரை அதிகாரிகள் மின்கம்பத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து பொலிஸார் அந்த நபரை மின்சாரக் கம்பத்திலிருந்து இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தனது மூன்று குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக தனது மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர உதவுங்கள் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.