25 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது தாத்தா

இந்தியாவில் ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

குறித்த நபருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கம் திருமணமாகிவிட்டது. தனது மனைவி இறந்ததிலிருந்தே தனியாக வசித்து வந்தார். இப்படியொரு முதுமைக் காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று குறித்த தாத்தா ஆசைப்பட்டார். அதனால், 2வது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இந்நிலையில் 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமண வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், மணமகள் – மணமகனின் முழு சம்மதத்தை பெற்றே இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியை பார்க்க ஏராளமானோர் மண்டபத்தில் திரண்டு வந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்