
23 ஆலயங்களில் கொள்ளை : பிரதான சந்தேக நபர் மற்றும் வியாபாரிகள் கைது
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள 23 ஆலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கு உதவிபுரிந்த வியாபாரிகள் இருவரையும் பொலிஸார் இதன்போது கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நுவரெலியா – அம்பேவளை பொரகஸ் பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஏனைய இருவரும் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்