21 மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர்

226 பேர் இணைந்து 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர். மக்களை இவ்வாறான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு அவசியம். நெருக்கடியான தருணங்களில் மாத்திரம் ஐக்கியப்படாத- மாறாக நெருக்கடியிலிருந்து பாடங்களை கற்று இன, மத பேதங்கள் காணப்படாத நாட்டை உருவாக்குவது குறித்தே எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.