
20 பயனாளிகளுக்கு வெளியிணைப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் நீரை நன்னீராக மாற்றும் நிறுவனத்தால் முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு 40 குதிரை வலு கொண்ட யமகா வெளியிணைப்பு இயந்திரங்கள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்குட்பட்ட 20 பயனாளிகளுக்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபனால் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்ட அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஐந்து ஆட்டுகளுக்குள் வழங்கப்பட்ட வெளியிணைப்பு இயந்திரங்களை பயனாளிகள் விற்பனை செய்யக்கூடாது என்கின்ற நிபந்தனையிலேயே குறித்த வெளியிணைப்பு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வெளியிணைப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், நி்ர்வாகிகள், கடல் நீரை நன்னீராக்கும் திட்ட அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.