
இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு -படங்கள் இணைப்பு-
பசறை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் இரண்டு இளைஞர்களின் சடலங்களை பதுளை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளனர். ஊயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது 10 பசறை கனுவர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மரணத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.