18 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்

கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் 18 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

பிரதமர் தினேஸ் குணவர்தன – அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

கடற்றொழில் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா

கல்வி அமைச்சர் – சுசில் பிரேமஜயந்த

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன

சுகாதாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் – கெஹலிய ரம்புக்வெல்ல

விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புத்துறை அமைச்சர் – மஹிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் – விஜேதாஸ ராஜபக்ஷ

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் – ஹரின் பெர்னாண்டோ

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் – ரமேஷ் பத்திரன

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகார அமைச்சர் – அலி சப்ரி

பௌத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் – கஞ்சன விஜேசேகர

சுற்றாடல் அமைச்சர் – ஹாபிஸ் நஷீர் அஹமட்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் – மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நளின் ருவன்ஜீவ பெர்னாண்டோவும் பதவியேற்றுள்ளனர்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172