கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மூவரின் சடலம்

கனடா ரொறன்ரோ பகுதியல் நேற்று முன் தினம் வியாழக்கிழமை வீடொன்றிலிருந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்க நேற்று முன் தினம் கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சடலங்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனையின் பின்னரே இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் உறுதிபடுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் அதனை தெரிவிக்க முன்வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.