16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கணித ஆசிரியரின் மனைவி வழங்கிய தகவல்

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கணித செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

குறித்த ஆசிரியர் மாணவிகளை வீடுகளுக்கு செல்ல உதவுவதாக கூறி தனது காரில் ஏற்றிச்சென்று களுத்துறை லாகொஸ்வத்தை பகுதியில் வைத்து வைத்து துஷ்பிரயோகம் செய்து அதனை தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளதுடன் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், சூம் தொழில்நுட்பம் ஊடாகவும் மாணவிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தும் ஆசிரியர் மாணவிகளை வற்புறுத்தி ஆடைகளை கலைய வைத்து அதனையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் ஆசிரியரின் மடிகணினியில் இருந்துள்ளது.

அவற்றை ஆசிரியரின் மனைவி தற்​செயலாக பார்த்ததை அடுத்துஇ அவர் மாணவிகளின் பெற்றோருக்கு இது தொடர்பில் அறிவிக்கவே பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்