15 வயது சிறுமியை கர்பமாக்கிய 18 வயது இளைஞன் கைது
மட்டக்களப்பு வாகரை பகுதியில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞனை நேற்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவர் 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்த நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக்கியதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் ஒன்றினைத்து வைத்ததையடுத்து இருவரும் கணவன் மனைவியாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவல் பிரகாரம் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைனுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டது. இதை அறிந்த இருவரும் மறைந்திருந்த நிலையில் இளைஞன் நேற்று கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றசாட்டின் கீழ் வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்