14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்
இந்தியா – கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் 38 வயதுடைய பெண்ணுக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது மகள் பெங்களூரில் உள்ள தனியார் பாடசாலையில் தற்போது 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது பாடசாலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவி பங்கேற்று கடந்த 6 ஆண்டுகளாக தன்னை தனது தாயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்தாள். இதைக்கேட்ட ஆசிரியைகள் தலைமை ஆசிரியர் மூலமாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் குறித்த மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதாள். இதையடுத்து பொலிஸார் அந்த மாணவியின் தாயை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், திருமணத்துக்கு பிறகு கணவனுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தனது மகளுக்கு கற்றுக்கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
அதையடுத்து பொலிஸார் அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.