
14 இந்திய மீனவர்கள் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
