125 கிலோ ஹெரோயினுடன் அறுவர் கைது

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில் 125 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது 6 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும் அரச புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த பாரியளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது போதைப்பொருள் கடத்திய படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வியாழக்கிழமை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்