11 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.