100 வயதை பூர்த்தி செய்த பாட்டியின் பிறந்தநாள்!

-பதுளை நிருபர்-

பதுளை மாவட்டத்தில் எல்ல, பல்லகெடுவ இந்துகல மேற்பிரிவு தோட்டத்தில் 100 வயதை பூர்த்தி செய்த கதிராயி அம்மையாரின் பிறந்த தினத்தை இந்துகல மேற்பிரிவு பொது மக்கள் மற்றும் உதய சூரியன் இந்து இளைஞர் மன்றம் இணைந்து குறித்த அம்மையாரின் பிறந்த தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடினர்.

குறித்த நிகழ்வு பல்லகெடுவ இந்துகல வாசிக சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அம்மையாருக்கு பொன்னாடை போர்த்தி கேக் வெட்டி பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்