10 வயது மாணவியை கடத்த முயற்சி
பண்டாரவளை நகரிலுள்ள பாடசாலை மாணவி ஒருவரை வேனில் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துஹுல்கொல்ல பிரதேசத்தில் தரம் 6 கல்வி கற்கும் 10 வயதுடைய மாணவியையே கடந்த 19 ஆம் திகதி கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ்ஸுக்காக தனியாக நடந்து சென்றபோது, தொலைவில் வெள்ளை நிற வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. பின்னர் கறுப்புத் துணியால் முகத்தை மூடியிருந்த இளைஞர் ஒருவர், வேனில் இருந்து இறங்கி மாணவியின் அருகில் வந்து, ‘உனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சொக்லேட்டை உனது தாயார் உன்னிடம் கொடுத்து தன்னுடன் வேனில் வரச் சொன்னதாகவும்’ அந்த மாணவியிடம் கூறியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அச்சமடைந்த மாணவி, பண்டாரவளை நகரில் உள்ள கடைக்கு ஓடிச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். அதனையடுத்து இது தொடர்பில் தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மாணவி தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்