
02 ரயில்கள் மோதி விபத்து : 17 பேர் பலி
பங்களாதேஸின் கிழக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டாக்காவின் வடகிழக்கு பகுதியில், பயணிகள் ரயிலின் பின்னால் பயணித்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவறான சமிக்ஞை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்