
𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் நடாத்தப்பட்ட மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள்
அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் கடந்த திங்கட்கிழமை மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள் மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில், இலவசமான முறையில் இப்பாடசாலையில் “வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 11, 12 , 13 மாணவர்களுக்கும், “சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி” ( Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை, பயிற்சியாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு ஆலோசகரும் KTP ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவன நிறுவுநர் முனைவருமான K.T.பிரஷாந்தன் நடாத்தினார்.












