
ஹரின் – மனுசவிற்கு வழங்கப்பட்ட பதவிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமைகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த இருவரும் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
