ஹரக் கட்டா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கை ஜூன் 9 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதிவாதியான ஹரக் கட்டா பலத்த பாதுகாப்புடன் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.