சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

 

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பெயரிடப்படாத கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடனான தொடர்பிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.