ஹரக் கட்டாவின் ரூ.300 மில்லியன் குற்றச்சாட்டு: பொலிஸ் விசாரணை
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜிபி தேசபந்து தென்னகோன் ஆகியோர் ரூ. 300 மில்லியன் கப்பம் கேட்டதாக பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் நதுன் சித்தக விக்ரமரத்னே, ஹரக் கட்டா கூறிய கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டபோது, பணம் செலுத்த மறுத்ததால் தங்காலை பழைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஹரக் கட்டா தெரிவித்தார். “சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன அவற்றை நான் பின்னர் வெளிப்படுத்துவேன்,” என்று மீண்டும் காவலில் எடுக்கப்படுவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து காவலில் இருப்பதால் மாதத்திற்கு ரூ. 10 மில்லியன் செலவாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மார்ச் 2023இல் மடகாஸ்கரில் இருந்து ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது குடு சாலிந்து ஆகியோரை நாடு கடத்தியது. அதன் பின்னர், அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (டிஐடி) காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டாவின் கூற்றுக்கள் குறித்து இப்போது முறையான விசாரணை நடந்து வருவதாக பொலிசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.