
ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் நிறைந்த குப்பைகள்
வரலாற்று சிறப்புமிக்க கண்டி – ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடதாசிகள் என குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது.
யாத்திரிகர்கள் பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை வீதியில் விட்டுச் செல்வதால், துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சுகாதார பிரச்சனை ஏற்பட்டு நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீ தலதா மாளிகை வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 3 இலட்சத்திற்கு மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து மக்களையும் கோரியுள்ளார்.
யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்