
வைத்தியசாலையின் பொறுப்பின்மை : குழந்தையை பிரசவித்துவிட்டு உயிரிழந்த இளம் தாய்
இளம் கர்ப்பவதி ஒருவர் பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் (24 வயது) என்கின்ற இளம் கர்ப்பிணித் தாயொருவர் கடந்த வியாழக்கிழமை மூதூர் தள வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் வைத்தியசாலை நிர்வாகம் விசேட பெண் நோயியல் வைத்திய நிபுணர் கடைமையில் இல்லை.
எனினும் குறித்த கர்ப்பவதி பிறிதொரு விசேட வைத்திய நிபுணர் கடமையில் உள்ள வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யாமையின் காரணமாக நேற்று முற்பகல் அவர் மிக ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்துள்ளார்.
அதன்பின்னர் ஏற்பட்ட அதீத குருதிப் பெருக்கின் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன் குழந்தை திருகோணமலை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் தாயும் திருகோணமலை வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் வைத்திய சாலை வட்டாரத்திலிருந்து அறியமுடிகிறது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குடும்பத்தினர் பொலிஸ் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் பாட்டாளிபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
