
வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தைஈட்டித் தரும்சுயதொழில்
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் சுயதொழில் திட்டம் வெற்றியளித்துள்ளது. சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம்பெண்கள் அமைப்பினால் இளம்பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த சுயதொழில் திட்டம் மிகக் குறுகியகாலப் பகுதிக்குள் வெற்றியளித்துள்ளதாக அந்தஅமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானிகாசிநாதர் தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள்,இளைஞர்கள், யுவதிகளைஉள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்புப்பண்ணையில் இடம் பெற்ற நிகழ்வில் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றிய போது,
பயனாளிகளால் வளர்க்கப்பட்டு இறைச்சிக்குத்தயாரான நிலையில் இருந்த 100 கோழிகளை விற்பனை செய்யும் நிகழ்வு இடம்பெற்W விற்பனை செய்த வருமானத்தைக்கொண்டு பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்Tk; ,lk;ngw;wJ.
முதற்கட்டமாக பொன் FON நிறுவனத்தின் நிதிஅனுசரணையில் 5 இலட்ச ரூபாய்செலவில் இறைச்சிக் கோழிகள் வளர்ப்பதற்கானஉதவிகள் வழங்கப்பட்டன.அத்திட்டம் ஒரு மாதகாலப்பகுதியில் வெற்றியளித்து அதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வலையமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில்அதிலுள்ள இளையோருக்கும்பெண்களுக்கும் பயிற்சிகள்,செயலமர்வுகள், விழிப்புணர்வுகள்,தொழில்துறை உற்பத்திக்கண்காட்சிகள், கற்றல்கள விஜயங்கள்,பொருளாதார வாழ்வாதாரஉதவு ஊக்கங்கள்என்பனவற்றோடு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும்வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் ஏறாவூர்ப்பற்றுப்பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்முஹம்மத் றுசைத்,இளம் பெண்கள்அமைப்பின் வெளிக்களஇணைப்பாளர் கே.ஜெயவாணி உட்பட பரிந்துரைவலையமைப்பிலுள்ள பயனாளிகளும்கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்