வேன் வீதியை விட்டு விலகி விபத்து!
-சம்மாந்துறை நிருபர்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்முனை அம்பாறை பிரதான வீதியில் வங்களாவடி எனும் இடத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது .
