வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஹெலிகொப்டர் விபத்து – ஐவர் பலி
பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில்
5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளத்தில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன