-மூதூர் நிருபர்-
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலய வெளி வளாகம் மற்றும் உள் பகுதிகள் இன்று வியாழக்கிழமை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.
பிரதேச சபையின் தோப்பூர் சுகாதார தொழிலாளர்கள்,பெற்றார்கள்,மாணவர்கள் இணைந்து தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயம் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



