
வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டு பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோமரங்கடவல போலீஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை விசாரணை செய்த போது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல-கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வரை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விசாரணை செய்து வருவதுடன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்