வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த உணவகம்

வில்பத்துவ தேசிய பூங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலையடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை, புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகள் குழு ஆகியவை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

உணவகத்தை சோதனை செய்தபோது, 130 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஒன்றரை லீற்றர் குடிநீர் போத்தல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

மேலும், ஒன்றரை லிற்றர் குடிநீர் போத்தல் ஒன்றுக்கு கூடுதலாக 70 ரூபாய் வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

அத்துடன், இந்த உணவகத்தில் விற்கப்படும் அனைத்து உணவு மற்றும் பானங்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.