
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : பெண் கைது
தென் கொரியாவில் ஈ8 விசா பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின் பிரகாரம், அந்த பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் புகார் அளித்தவர்களிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை திங்கட்கிழமை பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்