
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டை கடத்திய தொழில் அதிபர் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டை நாட்டிற்கு கடத்திய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழகுசாதனப் பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் இலங்கைக்கு கொண்டு வந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய பயணப் பொதியில் சிகரெட்டுகளை கவனமாக மறைத்து வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
