வெளிநாடு செல்வதை நிறுத்தி வைத்தியர்களுக்கு ஏற்ற வசதியை செய்ய வேண்டும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலைமையில் நாட்டில் மிகுதியாக இருக்கின்ற வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து வைத்தியர்களுக்கு ஏற்ற வசதியை நாட்டிலே செய்து கொடுக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்க முடிந்தது.

வைத்தியசாலையிலிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக ஏ9 வீதிக்கு வந்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்