வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரலாம்

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்