வெசாக் தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் 2 நாட்களுக்கு திறந்திருக்கும்

கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரை திறந்து வைக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்