வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பாக ஆளுநர் சமரச முயற்சி -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர்-

வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினையை இன்று  ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக பார்வையிட்டார்.

வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறித்த இடத்தை இன்று பார்வையிட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வீரமுனைக்கு வருகை தந்தார்.

குறித்த வரவேற்பு கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கும் வீரமுனை கோவிலுக்கும் உள்ள தூரத்தை நேரில் சென்று அவதானித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, போக்குவரத்து , நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கிராமிய வீடமைப்பு ,கிராமிய மின்சாரம் ,கட்டிட நிர்மாண அமைச்சுக்களின் செயலாளராக  எம்.கோபால இரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், பிரதேச செயலாளர் ஹனிபா, பிரதேச சபை செயலாளர் முகம்மட், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் றனுஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சகில், ஐக்கிய தேசியக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் வாஸித், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வீரமுனை கோவில் உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் என முக்கியமானவர்கள் மூடிய அறையினுள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதில் முஸ்லிம் தமிழ் உறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, கலையரசன், பள்ளிவாசல் தலைவர், கோவில் தலைவர், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள தலைவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் போன்றவர்களிடம் இதற்கு பெறுப்பான திணைக்களத்தின் வரைவு படங்களையும் மற்றும் வளைவு கோபுரம் அமைக்கு பகுதியில் காணப்படும் முஸ்லிம் தமிழ் மக்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிக்குமாறும் இதற்கான தீர்வை ஒருமாதம் பத்து நாட்களுக்குள் தருவதாகவும் ஆளுநரால் கூறப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்