வீதிகளில் இறங்கிய இஸ்ரேல் மக்கள்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த 6 பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் கூடிய பொது மக்கள், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன் பல கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
