
வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது
-திருமலை நிருபர்-
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரவெவ பொலிஸாருக்கு இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிற்குள் 05 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.