
வீட்டின் மீது சரிந்து விழுந்த மண் மேடு: 9 வயது சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில்
-பதுளை நிருபர்-
பதுளை – ஹாலிஎல பகுதியில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக வீடொன்றின் மீது மண்மேடு சரிந்த விழுந்ததில் சிறுமி காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரொசட் தோட்டம், கிரவனாகொட, உடுவர, ஹாலிஎல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 9 வயதுடைய சிறுமி பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஆங்காங்கே சிறு சிறு மண்சரிவுகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்